யாழில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் தீக்கிரை!

340 0

autoயாழ்.நகருக்குள் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்துள்ளனர்.மேற்படி சம்பவம் இன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் யாழ்.வைத்தியசாலைவீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் தகவல்தருகையில்,இன்றைய தினம் அதிகாலை 2 மணியள வில் 4 வரையான மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியைதீயிட்டு கொழுத்தினர்.

பின் மோ ட்டார் சைக்கிளையும் கொளுத்தி விட்டு, வீட்டுகதவு, யன்னல்களை உடைக்க முயன்றபோது நாங்கள் வெளியே வந்ததையடுத்து அவர்கள்தப்பிச் சென்றுவிட்டனர். என கூறினார்.

இதேவேளை சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.