அதிவேக பாதை கட்டண அதிகரிப்பை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்-நளின்

202 0

நெரிசல் காலங்களில் அதிவேக பாதைகளின்  கட்டணம் 100 ரூபாவினால்  அதிகரிக்கப்பட்டுள்ளமையானது மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். 

மக்களுக்கு நிவாரணங்கள் மட்டுமல்ல நீண்ட நாள் நலன்களையும் கருத்திற் கொண்டே வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றது அவை தொடர்பில் தற்போது மீள் பரிசீலனை செய்யப்படுகின்றது. 

நெருக்கடி காலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளின் பாவனை கட்டணம் 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளதால் விரைவில் மீள்பரிசீலனை செய்யப்பட்டு மாற்று திட்டம் முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.