ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக பொதுஜன பெரமுனவினர் இன்று ‘பொருத்தது போதும்’ என்ற தொனிப்பொருளில் கண்டியில் முன்னெடுத்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
வரலாற்று காலங்களில் அரசர்கள் அந்நியர்களுக்கு எதிராக போராடியே தாய் நாட்டை பாதுகாத்தார்கள். இக்காலக்கட்டத்தில் மன்னர்கள் எவரும் அந்நியர்களுக்கு விலைபோகவில்லை. ஆனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சி மேற்குலகத்தவர்களுக்கு முழுமையாக விலைபோயுள்ளனர்.
எனவே ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து மீண்டும் நாட்டை மீட்க வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் ஒன்றுப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.