புத்தாண்டுக்கு முன்னர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு

200 0

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான சம்பள உயர்வினை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். 

அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைச்சுக்களினூடாக முன்னெடுத்து வருவதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சி அலவதுவல தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.