Sசட்டவிரோதமான முறையில் டுபாயில் தயாரிக்கும் ஒரு தொகை சிகரெட்டுக்களை இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த சந்தேக நபர்களை சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 58, 40 வயது மற்றும் 18 வயதுடைய வியாபாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் சவூதி அரேபியாவிலிருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள், குறித்த நபர்களின் பயணப்பொதியை சோதனையிட்டபோது ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுக்களை மீட்டுள்ளனர்.
354 பொதிகளில் சுமார் 38 இலட்சத்து 94 ஆயிரம் ரூபா பெறுமதியாக “டொப் மைவுன்டன் ”வகையான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 70,800 சிகரெட்டுக்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.