கே.டி. லால்காந்தவுக்கு விளக்கமறியல்

252 0

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த  நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

14 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அநுராதபுரம் பிரதேசத்தில் கே.டி லால்காந் செலுத்தி சென்ற வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார். 

மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கே.டி லால்காந்த கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.