காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலி

273 0

காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சூரின்சார் பகுதியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி பேருந்து ஒன்று நேற்றிரவு சென்று கொண்டிருந்தது.  இந்த பேருந்து உத்தம்பூரின் மஜல்டா பகுதியில் வந்தபொழுது பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.  இதில் 5 பேர் அந்த இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

இதனை அடுத்து தகவல் அறிந்து உடனடியாக அங்கு சென்ற போலீசார் விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.