மாணவர்களுக்கு மும்மொழிகள் கற்பிக்க நடவடிக்கை – மனோ

242 0

மும்மொழியினை கற்கும் வாய்ப்பினை மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் அரசகரும மொழிகள் அமைச்சினால் தமிழ் மற்றும் சிங்களம் மொழிகளை கற்பிக்கும் 6 ஆயிரம் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார். 

பாடசாலை மாணவர்களுக்கு மும்மொழியினையும் கற்பிக்கும் நோக்கில் அரச கருமமொழிகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘மொழியை கற்போம் – மனதை வெல்வோம்’ நிகழ்வு இன்று கொழும்பு இராமநாதன் இந்து கல்லூரியில் கல்லூரியில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.