எப்.சி.ஐ.டி. பிரதானி தொடர்பில் சி.ஐ.டி.சிறப்பு விசாரணை

246 0

நிதிக்குற்றப் புலனயவுப் பிரிவின் (எப்.சி.ஐ.டி.) பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

நிதிக் குற்றப்புலனய்வுப் பிரிவின் இரகசிய ஆவணங்கள், விசாரணை தகவல்களை சிரேஷ்ட பிரதிப் பொலிச் மா அதிபர் ரவி வைத்தியல்ங்கார உள்ளிட்ட அப் பிரிவின் சிலர், சந்தேக நபர் தரப்புக்கு வழ்னக்கி அதனூடாக சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு கொடுத்த உத்தர்வுக்கு அமைவாகவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.