கொழும்பு துறைமுகம் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைக்கப்படும் – சாகல

298 0

கொழும்பு துறைமுகத்தை எதிர்வரும் 12-18 மாதங்களுள் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துற‍ைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைப்பது காலத்தின் தேவையாகும். மேலும் கொழும்பு துறைமுகத்தின் பிரதான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியால் இத்திட்டத்தின்  பொருட்டு ரூபாய் 929 மில்லியன்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு துறைமுகம் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைப்பதன் மூலமாக  ஒன்றினைந்து கூட்டாக செயற்படும் திறன் அதிகரிக்கும். 

குறித்த நிலமைக்கேற்ப செயற்படுதல் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்திச் செய்வதன் மூலமாக இதுவோர் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றமடையும். தொழில்நுட்ப அபிவிருத்தி எனும் அடிப்படை திட்டத்தை மேம்படுத்துவதன் மூலமாக இந்நீண்டகால அபிவிருத்திச் செயற்பாட்டினை முன்னோக்கி கொண்டுச் செல்ல இயலும்.

இத்திட்டத்கின் கீழ் முனையங்களின் தொழில்நுட்ப வசதிகளை அபிவிருத்திச் செய்வதன் ஊடாக முனைய முகாமைத்துவம் மற்றும் சரக்கு கையாளல் உரிய முறையில் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.