மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து 26 மனித அவயவங்கள் மீட்பு

274 0

23079மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து 26 மனித அவயவங்கள் குற்ற புலனாய்வு காவல்துறையினரால் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவின் அடிப்படையில் அங்கு சென்ற குற்றப் புலனாய்வு பிரிவின் குழு இதனை கைப்பற்றியுள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும், ரக்பி வீரர் வசிம் தாஜுதீனின் காணாமல் போன உடற்பாகங்களை தேடுவதற்கு, குற்றப் புலனாய்வு பிரிவு, கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவானிடம் அனுமதி கோரியது.

அதன் அடிப்படையிலேயே மனித அவயவங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தாஜுதீனுக்கு முதலாவது மரண பரிசோதனை மேற்கொண்ட போது காணாமல் போன உடற்பாகங்கள், பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரியால் குறித்த கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையிலேயே அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.