இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் பீடி இலை பறிமுதல்..!

223 0

Share

ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு டன் பீடி இலையை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த பீடி இலைகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சங்குமால் கடற்கரையில் சுங்கத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த வேல்முருகன், கார்த்தி என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலைகளை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களிடமிருந்த பீடி இலைகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். 
இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்டதாக இருவரையும் கைது செய்த ராமேஸ்வரம் பொலிஸார், இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியைத் தேடி தூத்துக்குடி விரைந்துள்ளனர். “பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் எடை ஒரு டன். இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் இருக்கும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.