மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவை களமிறக்க முனையும் மஹிந்த அணி!

273 0

major-general-sumedha-perera-380-seithyமேஜர் ஜெனரல் சுமேதா பெரேரா கடந்த மாதம் 30ஆம் திகதி இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரை உள்ளூராட்சித் தேர்தலில் களமிறக்க மஹிந்த அணியினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுறது.

ஓய்வுக்குப் பின்னர், மேஜர் ஜெனரல் சுமேதா பெரேரா நியூயோர்க்கிலுள்ள ஐ.நாவின் இலங்கை வதிவிட பிரதிநிதியின் பணியத்திற்கான புதிய இராணுவ இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ சிப்பாய்களை இணைத்துக்கொண்டு தேர்தலில் களமிறங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் மஹிந்த ஆதரவு பொது எதிரணியானது, அவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. எனினும், அவர் இன்னும் உரிய பதில் வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருடன் நெருங்கிய உறவை பேணி வந்த சுமேதா பெரேரா, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவ சதிப்புரட்சியொன்றை மேற்கொள்ள திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்ட விடயத்துடனும் தொடர்புபடுத்தி பேசப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.