ராமநாதபுரம் அருகே ஓடும் காரில் திடீர் தீ: 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிர் தப்பினர்

277 0

ramnad_3031192fராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிர் தப்பினர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்தவர் சிகாமணி. இவர் ராமநாதபுரத்தில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் 3 பேருடன் பரமக்குடியில் இருந்து காரில் ராமநாதபுரத்துக்கு நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தார்.

மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி அருகே வந்தபோது கார் இன்ஜினில் இருந்து புகை வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் காரை சாலை ஓரத்தில் நிறுத்தினார். அதையடுத்து காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். பின்னர் கார் முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதில் 2 பெண்கள் உட்பட 5 பேரும் உயிர் தப்பினர்.

ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ராமநாதபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.