ஆசிரிய உதவியாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

309 0
ceylon_teachers_union_01நாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவொரு சலுகைகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உலக ஆசிரியர் தினத்தில் அந்த சலுகைகளை பெற்றுத் தருமாறு கோரி, எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.