மஹிந்த – முஸ்லிம் சிவில் அமைப்பினர் சந்திப்பு!

199 0

அரசமைப்பில் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு இடையில், இன்று (16) கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் மீதான ஆட்சேபனைகளை, முஸ்லிம் சிவில் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும், இதன் போது முஸ்லிம் அரசியல் கட்சியின் கருத்து, அவர்களுடைய சமூகத்தின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.