அனுராதபுரம் தகயாகம பகுதியில் விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி, துப்பாக்கி ரவைகள் போன்றன மீட்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் தகயாகம, ஜெயசிங்க பகுதியில் நேற்று (15) மாலை 4மணியளவில் மாநகரசபையினரால் வீதியோரங்களை துப்பரவு பணிகளை மேற்கொண்ட போது துப்பாக்கி ரவைகள் வீதியோரத்திலுள்ள வடிகானில் பை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த பகுதிகளை துப்பரவு செய்த மாநகரசபையினர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அனுராதபுரம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடமைகளை மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் -46 எம்.பி.எம்.ஜி துப்பாக்கியினுடையதெனவும், விடுதலைப்புலிகளின் சின்னதுடனான தொப்பி ஒன்றும் இவை புதியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.