துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் துப்பாக்கியுடன் கைது

216 0

மீட்டியாகொட, உடுமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் டி 56 ரக துப்பாக்கி மற்றும் 03 தோட்டக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 05ம் திகதி குறித்த நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நபரை விசாரணைக்காக பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இதன்போது காயமடைந்த நபர் துப்பாக்கியை திருத்தம் செய்யும் போது இயங்கியதில் காமடைந்துள்ளமை தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்கள் இன்று பலப்பிட்டிய நீதவான் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.