முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்து!

206 0

மட்டக்களப்பு, படுவான்கரை கோயில்போரதீவு பிரதான வீதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற முற்சக்கர வண்டி வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதுண்டதில் முற்சக்கர வண்டி குடைசாந்து விபத்துக்குள்ளாகியது.

மேற்படி சம்பவம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

குறித்த முச்சக்கரவண்டி, காந்திபுரத்திலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருக்கும்போது அவ்வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாடுகள் குறுக்கிட்டதில் இவ் விபத்து ஏற்பட்டதாகவும், இதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.