மோடிக்கு எச்சரிக்கை – புறா மூலம் வந்தது

329 0

modi-cabinet45-29-1469761732இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு புறா மூலம் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனுப்பட்ட அந்த கடித்தில் ‘பாகிஸ்தான் பழிவாங்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எல்லை பிராந்தியமான காஷ்மீர் பகுதியில் உள்ள உரி பிரதேசத்தில அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து இந்தியாவும் பதில் தாக்குதலை எல்லையை கடந்து பாகிஸ்தானில் நடத்தியது.

இதில் பல பாகிஸ்தானிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்து.

இந்த நிலையிலேயே தற்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவிற்கு எதிராக போர் நடத்த பாகிஸ்தான் தயாராகவுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பலூன் முலமான ஒரு எச்சரிக்கையை தொடர்ந்து இது 2வது எச்சரிக்கை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த எச்சரிக்கைகளை அடுத்து இந்திய ராணுவம், எல்லைப் பகுதியில் ராணுவத்தினரை அதிக அளவில் குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.