பொய்களை நம்பி மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம்-வடக்கு முதல்வர்(காணொளி)

370 0

cm
1958ஆம் ஆண்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழர்கள் வெட்டிக்கொலை செய்ததாக கட்டுக்கதைகள் கட்டப்பட்டதாலேயே, பல தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 
எனவே பொய்களை நம்பி மக்களிடையே பிரிவினைகளையும், முரண்பாடுகளையும், வெறுப்புணர்வையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

 
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

 
நிகழ்வில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர், தெற்கில் சிறை தண்டனைக்கு இலக்காக வேண்டிய சிலர் தன்னை வைத்து அரசியல் நடத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.