நீரோடை ஒன்றில் விழுந்து குழந்தை பலி

12795 0

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்தெனிய பகுதியில் நீரோடை ஒன்றில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. 

நேற்று (10) பகல் 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நீரோடையில் விழுந்த குழந்தை அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உல்பத்வெவ, ருகுனுகம பகுதியை சேர்ந்த 2 வயதும் 3 மாதங்களுமான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment