‘சங்கவிரு சேபித்த நாஹிமிகம’ வீட்டுத் திட்டம் மக்களிடம் கையளிப்பு

212 0

கொழும்பு மாவட்டம் பாதுக்க, மாதுலுவாவ தெற்கு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ‘சங்கவிரு சேபித்த நாஹிமிகம’  வீட்டுத் திட்டம் இன்று பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் சபாநாயகர் கருஜயசூரியவின் பங்குபற்றலுடன், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரமேதாசவினால் காயத்திரிபுரம் வீட்டுத் திட்டம் இன்று  காலை 8.00 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

கம்உதாவ திட்டத்தின் கீழ்  சங்கவிரு சேபித்த நாஹிமிகம  வீட்டுத் திட்டத்தில் 18 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment