மதூஷை நாட்டுக்கு கொண்டுவந்தால் முறையான தண்டனை கிடைக்காது-விஜித்த ஹேரத்

4934 0

மதூஷை நாட்டுக்கு அழைத்துவந்தால் அவருக்கு முறையான தண்டனையை பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகள் இடமளிக்க மாட்டார்கள். அதனால் டுபாயில் அவருக்கு எதிராக வழங்ககப்படும் தீர்ப்பு எமது நாட்டு தீர்ப்பைவிட சிறந்ததாக இருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல் காரரான டுபாய் நாட்டில் கைதுசெய்யப்பட்டிருக்கும் மாக்கந்துரே மதூஷை இலங்கைக்கு அழைத்துவர அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாக்கந்துரே மதூஷுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் யார் என்று அனைவருக்கும் தெரியும். தெற்கில் இருக்கும் பிரபல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இவர்களின் பெயர்களை வெளிப்படுத்துமாறு நாங்கள் பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்தோம். போதைப்பொருள் வியாபாரிகளுடன் யார் தொடர்புகளை வைத்திருக்கின்றனர் என்பதை அப்போது மக்கள் அறிந்துகொள்வார்கள்.

Leave a comment