கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

316 0

வெலிபென்ன, லிஹினியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

லிஹினியாவ பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் வெலிபென்ன ​பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment