வாகன சாரதி பாடசாலைகளைக் கண்காணிக்கும் வேலைத்திட்டம்

438 0

நாடு முழுவதிலுமுள்ள வாகன சாரதி பாடசாலைகளைக் கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்று மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்தார்.
இதற்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாத வாகன சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்கு எதிராக ஒரே முறையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. இருப்பினும், பாரிய பிரச்சினை நிலைமை காணப்படுமாயின், சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment