வறட்சியில் இருந்து மீண்டது மலையகம்:விவசாயம் புரிவோர் ஆறுதல்

242 0

கடந்த சில மாதங்களாக மலையக பகுதியில் நிலவிய கடும் வறட்சியின் பின்னர் நீரேந்து பகுதிகளின் நீர் மட்டம் அதிகளவு குறைந்து வந்தமை குறிப்பிடதக்கது.

இருந்த போதும் கடந்த இரு தினங்களாக மாலை வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இதன்படி நோட்டன்,நல்லதண்ணி,மஸ்கெலியா,சாமிமலை, பொகவந்தலாவ,நோர்வுட், டிக்கோயா, ஹட்டன், கொட்டகல,தலவாக்கல,பத்தனை,பசுமலை, அக்கரபத்தனை,டயகம, நாநுஓயா,நுவரெலியா போன்ற பிரதேசங்களிலேயே இவ்வாறு மழை பெய்து வருகின்றது.

இதனால் பெருந்தோட்டங்களில் தேயிலை செடிகள் சற்று துளிர் விட ஆரம்பித்துள்ளதுடன்,விவசாயம் புரிவோர் சற்றுஆறுதல் அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Leave a comment