துப்பாக்கியை காண்பித்து மரண அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது

237 0

நபர் ஒருவருக்கு துப்பாக்கியை காண்பித்து மரண அச்சுறுத்தல் விடுத்த இரண்டு பேர் சீதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சீதுவை, லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வந்த இரண்டு பேர் வீட்டின் உரிமையாளருக்கு துப்பாக்கியை காண்பித்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

இது சம்பந்தமாக கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து வௌிநாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் அதன் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நிதி கொடுக்கல் வாங்கல் பிரச்சினையே அச்சுறுத்தல் விடுக்க காரணம் என்று தெரிய வந்துள்ளது. 

32 மற்றும் 35 வயதுடைய ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

Leave a comment