றாகமை தனியார் வங்கியில் கொள்ளை

632 0

றாகமை தனியார் வங்கியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் இனம் தெரியாத நபர்கள் இருவரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  

மேற்படி வங்கியின்  நாளாந்த வேலை  நடவடிக்கைகள் சுமூகமாக  இடம்பெற்றுக்கொண்டிருந்த  போது தீடீர் என வங்கியினுள் நுழைந்த  இருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி 3 இலட்சத்து  80 ஆயிரம் ரூபாய் பணம்  மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 

இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் தலைக்கவசம் அணிந்து வந்ததுடன், கொள்ளையிட்ட பொருட்களுடன், மோட்டார் சைக்கிளில் தப்பிசென்றுள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பாக றாகமை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

Leave a comment