2 மாதங்களுக்குள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்- சிறிசேன

267 0

எந்தவித எதிர்ப்பு வந்தாலும் எதிர்வரும் இரண்டு மாதத்துக்குள் போதைப் பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தான் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கொலை முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாரித்துள்ள அறிக்கையை 2 வாரங்களுக்குள் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Leave a comment