அரச ஊடக நிறுவனத்தில் பதற்றம்!

243 0

அரச ஊடகநிறுவனமொன்றின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தலைவரின் அலுவலகங்களை பணியாளர்கள் முற்றுகையிட்டுள்ளதை தொடர்ந்து அங்கு சற்றுமுன்னர் பதட்ட நிலை உருவாகியுள்ளது

சமீபத்தில் இடம்பெற்ற இடமாற்றங்கள் குறித்து உயர் அதிகாரிகள் பதிலளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பணியாளர்கள் பணி;ப்பாளர் நாயகம் மற்றும் தலைவரின் அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளனர்.

இடமாற்றங்கள் குறித்து நாங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் எனினும் உயர் அதிகாரிகள் எவரும் எங்களிற்கு உரிய பதிலை வழங்கவில்லை என  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment