பாராளுமன்ற மோதல், விசாரணைகளை துரிதப்படுத்தவும் – ஆனந்த குமாரசிறி

211 0

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரதான இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளின் போது கடந்த நவம்பர் மாதம் 14,15,16 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் மோதல்களை அடுத்து நாட்டில் பாரிய குழப்பநிலை உருவாகியது.

இதனை அடுத்து பாராளுமன்ற வாரத்தில் ஏற்பட்ட குழப்பங்களின் போது அரச ஊழியர்களை தாக்கிய மற்றும் அரச சொத்துக்களை சேதமாக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் எழுவர் கொண்ட பாராளுமன்ற விசாரணைக் குழுவொன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான இந்தக் குழு கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி  சபாநாயகர் கருஜயசூரியவிடம் அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்ததுடன் சபாநாயகர் அது தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். 

மேற்படி குழுவானது மேற்கொண்ட சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 

59 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற விதிகள், சட்டத்தை மீறியுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment