சிறைக் கைதிகளைப் பார்வையிட இன்று விசேட அவகாசம்

463 0

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (04) சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தவகையில், இன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைக் கைதிகளுக்கு உணவு பானங்களை வழங்குவதற்கும் இதன்போது குடும்ப உறுப்பினர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வெலிக்கட சிறைச்சாலையிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு நேற்றிரவு முதலே கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் சிறைச்சாலைக்கு முன்னால் காத்திருப்பதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.  

Leave a comment