மவுசாகலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலம் மீட்பு

243 0

மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் சடலமொன்றை இன்று காலை 9:30 மணியளவில் மஸ்கெலியா பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 3 நாட்களாகக் காணாமல் போய்விட்டதாக பொலிஸ் நிலையத்தில் அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காட்டுமஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சவுந்தர்ராஜ் கீத்தலா என்ற மாணவியாவார்.இவர் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரிட்சை தோன்றியவர் என்று அவரது தந்தை கூறினார்.
மேலும் மாணவியின் சடலத்தை அவரது தந்தை அடையாளம் காட்டியதுடன்,நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a comment