சுதந்திர தின நிகழ்வுக்கான அழைப்பிதழ் கிடைக்கவில்லை-சரத்

251 0

71வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக தனக்கு இதுவரை அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மபஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். 

இன்று கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அழைப்பிதழ் கிடைத்தால், பீல்ட் மாஷலுக்கு உரிய கௌரம் இல்லாமல் போகும் என்பதால் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். 

பீல்ட் மாஷல் ஒருவரை அழைப்பதற்கான ஒழுங்குமுறை இருப்பதாகவும், அந்த முறைப்படி அழைப்பு வந்தால் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

Leave a comment