ரணிலுக்கு எதிரான மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஒருவர் விலகல்

965 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணை செய்யும் நீதிபதிகள் குழாமில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளார். 

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சர்மிளா கோனவில தாக்கல் செய்துள்ள இந்த மனு தீபாலி விஜேசுந்தர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 

இதன்போது தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த மனுவை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதி தீபாலி விஜேசுந்தர கூறியுள்ளார். 

அதன்படி மனுவை விசாரணைக்கு எடுக்கும் திகதி பற்றி தீர்மானிப்பதற்காக நாளைய தினம் வேறொரு நீதிபதி முன்னிலையில் அழைக்குமாறு நீதிபதி தீபாலி விஜேசுந்தர கூறியுள்ளார்.

Leave a comment