காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு வவுனியாவில்.

19228 0

சிங்கள படையரினரால் போரின் இறுதிநாட்களிலும் மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்ட்ட தங்கள் உறவுகளை தேடி அவர்களுக்கான தீர்வினை கோரி வடக்கு கிழக்கு மாவட்டங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று வவுனியாவில் பாரிய ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வுமற்றும் மன்னார் புதைகுழி விவகாரத்திற்கு நீதிகேட்டு வவுனியா பேருந்து நிலையம் முன்பாக பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

Leave a comment