தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை

262 0

தெஹிவளை பகுதியில் நபரொருவர்  தன்னைத்தானே  துப்பாக்கியால் சுட்டு  தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட காரணத்திற்காக சட்டபூர்வமான முறையில் பயன்படுத்தப்பட்டுவந்த துப்பாக்கியால் நெஞ்சுப்பகுதியில் தன்னை தானே  சுட்டு  தற்கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர் 64 வயதுடைய தெஹிவளை பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவரது சடலம் தொடர்பில்  நீதவான் விசாரணை இடம் பெற்றுள்ளதுடன், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால்  கைவிரல் அடையாளமும் பதிவு செய்யப்பட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment