வளங்களை விற்பது எமது நோக்கமல்ல – மஹிந்த

404 0

தேசிய வளங்களை விற்பனை செய்வது எமது நோக்கமல்ல என தெரிவித்த எதிர் கட்சி தலைவர், நாட்டில் காணப்படுகின்ற வளங்களைக் கொண்டே சிறந்த அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியும் எனவும் குறிப்பிட்டார். 

அத்துடன் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அம்பாந்தோட்டை மாவட்டம் முதலீடுகளுக்கு சிறந்த மாவட்டம் எனவும் தெரிவித்தார். 

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குமான சந்திப்பொன்று இன்று கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. 

தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் அபிவிருத்தி குறித்தோ, மக்களின் நலன்கள் தொடர்பாகவோ எத்தகைய அக்கறையும் கிடையாது. இதன் காரணமாகவே நாட்டில் பல்வே று நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a comment