சம்பள உயர்வை வலியுறுத்தி ஹட்டனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்

222 0

ஹட்டன் டிக்கோயா எள்பில்ட் தோட்ட கின்போல்ட் பிரிவைச் சேர்ந்த 60 வயதுடைய எஸ். கனேஸ் என்பவர் 1000 ரூபா வேதனம் வழங்க் கோரி இன்று காலை 10.25 மணியளவில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் உண்ணா விரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க அங்கத்தவர் எனவும், இவர் தனது உண்ணாவிரதத்தைச் சாகும் வரை இருக்கப் போவதாகவும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்க அடிப்படை சம்பளம் நாள் ஒன்றுக்கு 1000 ரூபா வழங்கக் கோரியே இப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment