புதையல் தோண்டிய நால்வர் கைது

223 0

கிரிதிவெல – குருதிய – ஹிஸ்வெல்ல பிரதேசத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த 04 பேர் பொலிஸ் விசேட அதிரடிபடையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கிடைக்க பெற்றுள்ள தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிரடிபடையினர் தெரிவித்துள்ளனர்.

கிரிதிவெல பகுதியை சேர்ந்த 30 மற்றும் 40 வயதுயைட நபர்கள் என தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment