வீதியை செப்பனிட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை

202 0

மஸ்கெலியா சமனெலிய மத்திய மகா வித்தியாலயத்திற்கு செல்லும் பிராதான வீதியானது கடந்த 20 ஆண்டு காலமாக செப்பனிடப்படாமல் உள்ளது. இவ்வீதியில் இலங்கை மின்சார சபை மற்றும் சென் ஜோசப் கிறிஸ்தவ தேவாலயம், இல்லங்கள் மற்றும் ஏனைய குடியிருப்புகள் என்பன அமைந்துள்ளன.

இந்த வீதியானது மஸ்கெலியா பிரதேச சபைக்கு உரித்தானதாகும். சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் உள்ள பகுதியில் உள்ள வடிகால்கள் மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

அதாவது இவ் வடிகால்களில் முற்றிலும் மண் நிறைந்த நிலையிலும் புற்கள் செறிந்து வளர்ந்த நிலையிலும் காணப்படுவதால் மழைகாலங்களில் இவ்வீதியினூடாக மழை நீர் அதிகம் வழிந்தோடுவதால் இவ்வீதி குண்டும்குழியுமாக காணப்படுகின்றது.

நாள் ஒன்றுக்கு சுமார் 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வீதியில் பயணிக்கின்றனர். மேலும் இவ் வீதியினுடாக பெருந்தோட்ட பகுதி வாழ் மக்களும் அதிகளவில் செல்கின்றனர். அது மட்டுமல்லாமல் ஞாயிறு தினங்களில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அதிகளவில் மக்கள் அவ் வீதியினூடகவே பயணிக்கின்றனர்.

ஆகவே உடன் இந்த வீதியை செப்பனிட்டுத் தருமாறு பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Leave a comment