பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்

222 0

யாழ். மத்திய பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் , கடையின் உரிமையாளர்களுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்

குறித்த பஸ் நிலையத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதால், அதனை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறும், குறிப்பிட்ட திகதிக்குள் கடைகள் அகற்றப்படாதுவிடின், எதிர்வரும் முதலாம் திகதி மாநகர சபை கட்டளை சட்டத்திற்கு அமைவாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார்.

Leave a comment