ஜனாதிபதி உடனடியாக வழக்கு தொடுக்கவேண்டும்-அஜித்

226 0

மத்தியவங்கி பிணைமுறி மோசடி உட்பட பாரிய நிதி மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்ட மோசடிகாரர்களுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக வழக்கு தொடுக்கவேண்டும். 

ஜனாதிபதிக்கே அந்த அதிகாரம் இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அஜித் பி பேரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

 மத்திய வங்கி பிணைமுறி மோசடி உட்பட பாரிய நிதி மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் மோசடிக்காரர்களுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 

ஜனாதிபதிக்கே அந்த அதிகாரம் இருக்கின்றது. இந்த வழக்குகளை விசேட நீதிமன்றங்களில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Leave a comment