யேர்மனியில் 70 நகரங்களில் 19,20, தை, 2019 ஆகிய இரு நாட்களும் தமிழர் திருநாள் மிக விமர்சயாகக் கொண்டாடப்பட்டது. யேர்மனியின் முக்கிய இடங்களில் உள்ள எழுபது தமிழாலயங்கள் இம்முறை தைப் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் அந்த நகரத்தில் உள்ள பொதுமக்கள் இப் பொங்கல் விழாவினில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். சில இடங்களில் வங்கக்கடலிலே காவியமான தளபதி. கிட்டண்ணா உட்பட பத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்குத் தீபமேற்றி, மலர்தூவி, வணக்கம் செலுத்தி விட்டு தங்கள் தமிழர் திருநாள் நிகழ்வுகளை ஆரம்பித்தனர்.
பல தமிழாலயங்கள் ஐந்து ஆறு பானைகளை வரிசையாக வைத்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், புடைசூழ பொங்கல் பெருவிழாவைக் கொண்டாடியது சிறப்பாக இருந்தது. பானைகள் பொங்கி வழியும்போது மாணவர்களும் பெற்றோர்களும் பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரித்து மகிழ்ந்த காட்சி அட்டகாசமாக இருந்தது.
சில தமிழாலயங்களில் யேர்மனிய மக்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. யேர்மனியின் தலைநகரில் உள்ள பேர்லின் தமிழாலயத்தில் பொங்கற்பானை பொங்கி வழிந்தபோது ஆசிரியைகள் பறையடித்து மகிழ்ந்து கொண்டாடிய காட்சி அற்புதமாக அமைந்தது.
- Home
- முக்கிய செய்திகள்
- யேர்மனியில் தமிழாலயங்களின் தமிழர் திருநாள் 2019
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024 -
தமிழர் திருநாள்!
January 14, 2024 -
குழந்தை இயேசுவின் பிறப்பு
December 25, 2023
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024 -
சாந்தனுக்கு வஞ்சம் தீர்த்த காலம்! கட்டியணைத்து கதற காத்திருக்கும் தாய்
February 29, 2024 -
அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்
February 27, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
மாவீரர் வெற்றிக்கிண்ணப் பூப்பந்தாட்டம் யேர்மனி-9.3.2024
February 27, 2024 -
வாகை மயில் 2024 – யேர்மனி
February 26, 2024 -
அனைத்துலகப் பெண்கள் தினம் 2024- யேர்மனி
February 26, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024