விபத்தில் பெண் ஒருவர் பலி

4649 0

மீரிகம – திவுலுபிட்டிய வீதியின் 20 ஆவது கட்டைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரை மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மீரிகம பகுதியை சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment