தளபதி கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி.

403 0

19.1.2019 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்வ் நகரில் தளபதி கிட்டண்ணா உட்பட பத்து வீரவேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரப்பித்த இந் நிகழ்வில் தமிழீழ மக்கள் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு தங்கள் தளபதிக்கும் அவருடன் வங்கக்கடலில் காவியமான மாவீரர்களுக்கும் மலர்தூவி தீபம் ஏற்றி தங்கள் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டனர்.
அத்தோடு இந்; நிகழ்வில் தமிழிசை, இசைவணக்கம், கவிவணக்கம், சிறப்புரை, விடுதலை நடனங்கள் போன்றவையும் இடம்பெற்றன. இறுதியில் தேசியக் கொடி இறக்கி வைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் பாடலுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

Leave a comment