தங்க நகைகளுடன் மூவர் கைது

206 0

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூரிலிருந்து தங்க நகைகளை இலங்கைக்கு எடுத்து வர முயற்சித்த மூவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்தார். 
நேற்று மாலை சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்த UL-303 விமானத்தின் மூலமே இவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். 
கைதுசெய்யப்பட்ட மூவரும் குருநாகல் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 834 கிரோம் தங்க நகைகளின் பெறுமதி 45,87,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். 

Leave a comment