‘அரசமைப்புக்கு முன்னர் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும்’!

197 0

புதிய ​அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னர் தற்போது மக்கள் முகங்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் புதிய அரசமைப்பபைக் கொண்டு வருவதற்கு ​தேவையான காலம் இதுவல்ல என்றும் மல்வத்து பீடத்தின் மகா நாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலப்பகுதிக்குள் பல தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் சகல தேர்தல்களையும் நடத்தி விட்டு  அரசமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் மகாநாயக்கரைச் சந்தித்தப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment