வடக்கு முதல்வருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

332 0

vavuniya
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எழுக தமிழ் பேரணியின் ஊடாக வட மாகாண முதலமைச்சர் இனவாதத்தை வெளியிட்டு, பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இனவாதத்தை வெளிப்படுத்தி, அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கை பாதுகாக்கும் தேசிய அமைப்பினால் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
வட மாகாணத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள கிராமங்களை சேர்ந்த மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

\
வட மாகாணத்தில் வாழ்கின்ற சிங்கள மக்களை கருத்தில் கொள்ளாது, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.